| ஐ.நா நோக்கிய நடை பயணத்தில் 42 மைல்களை கடந்துள்ள சிவந்தன். |
|
|
|
| Sunday, 25 July 2010 12:18 |
|
பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் அவர் நடக்க வேண்டியிருப்பதாக, அவரது உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர். சிவந்தன் அவர்கள் மாலை 6 மணியளவில் டோவரை அண்மிப்பார் என உதவியாளர்கள் தெரிவித்துள்ள போதிலும், அவரின் கால்களின் தசைகள் இறுகிய நிலை காணப்படுவதாகவும், சிவந்தனுக்கு தைரியம் கொடுப்பதற்காக தமிழின உணர்வாளர்களை வீதிக்கு வந்து அவருக்கு தெம்பூட்டுமாறு அழைக்கின்றனர். இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இவரின் நடை பயணத்திற்கு தமிழ் இளையோர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் பல தமிழ் அமைப்புக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதோடு பல ஒத்துளைப்புக்களையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. |








இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை கடந்துள்ளார்.







