மிருசுவில் கொலை வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரண. PDF Print E-mail
Monday, 26 July 2010 09:13

2000ம் ஆண்டில் 8 பொதுமக்களைக் கொலை செய்ததாக இராணுவத்தினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

தீபாலி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ஷ, வராவெல ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மிருசுவிலில் 8 பொதுமக்களை கொலை செய்ததுடன் பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவருக்கு காயமேற்படுத்தியமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 5 இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் புரியும் சிறிலங்கா இராணுத்தினருக்கு எதிராகவும் சட்டம் செயற்பட்டு வருகிறது என்ற மாயையை சர்வதேச ரீதியில் ஏற்படுத்துவதற்காகவே காலம் கடந்து இந்த விசாரணையை சிறலங்கா அரசு மேற்கொள்வதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 106 guests online